கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல்களையும் கவிதைகளையும் கேட்டு, படித்து, இரசித்து மகிழ்ந்திருக்கிறோம். ஆனால் அவர் மிக எதார்த்தமாகவும் நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர் என்பது பலருக்குத் தெரியாது. அப்படி அவர் நகைச்சுவையாகப் பேசிய ஒரு சொற்பொழிவில் கேட்ட ஓரிரு சுவாரசியமான சிலேடைச் செய்திகளை மட்டும், இந்த 'தமிழோடு விளையாடு" பகுதியில் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். (ஒரு சொல் அல்லது தொடர்ச்சொல் பல பொருள் படும்படி அமைவது சிலேடை எனப்படும்.)
நம் தமிழ் வளமான மொழி என்பது நம் அனைவருக்குமே தெரியும். அது சொற்களின் களஞ்சியம். வார்த்தைகளின் வயக்காடு. அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து வார்த்தைகளை தேடிக்கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.
அப்படி பட்ட சிறப்பு வாய்ந்த நம் தமிழ் மொழியில் பல பொருள் தரும் சொற்கள் உள்ளன. ஒரு சொல் பல பொருள் தரும். அதே போல் ஒரு பொருளுக்குப் பல சொற்கள் உள்ளன.
நான் சிறுவயதில் கேட்ட கதை இது. தமிழறிஞர் ஒருவர் வாழ்வில் நடந்த சம்பவம். அந்த தமிழறிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்று நினைக்கிறேன். ஆனால் சரியாக நினைவில் இல்லை, அதனால் தமிழறிஞர் என்றே குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்திருந்தால், கீழே பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
புதிய நூல்
என்னைப் பற்றி
எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன். தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.
தொடர்பு கொள்ள
இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net