Chidhambaram Natarajar Temple

தமிழெமது தருமமுது

Family
Featured

தமிழ் உறவுகள்

தமிழ் மொழியைப் பற்றி நாம் எப்பொழுதும் பெருமையாகப் பேசுகிறோம்.  ஏனென்றால் தமிழ் மொழி மிகவும் வளமையான சிறப்புமிக்க மொழி மட்டும் அல்ல, அள்ள அள்ள குறையாத வள்ளல் மொழி. அப்படிப்பட்டத் தமிழ் மொழியில் உறவு முறைகளுக்கு (Relationships) என்னென்ன தமிழ்ச் சொற்கள் உள்ளன? எத்தனை விதமான உறவுமுறைகளுக்குப் பெயர்கள் உள்ளன, என்று தெரியுமா? நானறிந்த, எனக்குத் தெரிந்த தமிழர் உறவுமுறைகளை இங்கே தொகுத்து இருக்கிறேன்.

பரம்பரை - Lineage
Featured

பரம்பரை

"நாங்கள் எல்லாம் கவரிமான் பரம்பரை"
"நீ என்ன பெரிய இராஜ பரம்பரையா?"
""எங்க பரம்பரை இரத்தத்தில் கலந்திருக்கு"
"பரம்பரைப் பெருமையைக் கெடுக்காதே"
"அது எங்கள் பரம்பரையிலேயே கிடையாது..."

இப்படி பலவற்றை நாம் கேட்டிருப்போம்.

Arunagiri Nathar
Featured

ஓரெழுத்துப் பா....

ஓர் எழுத்து சொற்களையும் (படிக்க... ) ஓர் எழுத்து வரிசை சொற்களையும் (படிக்க... ) இதற்கு முன் பார்த்தோம். இன்று அப்படி, ஓர், ஓர் எழுத்து வருக்கச்சொற்கள் கொண்டு எழுதப்பட்ட ஓர் அருமையானப் பாடலைப் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்,

Maruu - Grammar

மரூஉ

தெரிந்த இலக்கணம் தெரியாத விளக்கம். அது என்ன தெரியாத விளக்கம் என்று கேட்கிறீர்களா? கட்டுரையை முழுவதும் படித்துப் பாருங்கள்.

Water bodies

நீர் நிலைகள்

"நீரின்றி அமையாது உலகு" என்பது திருவள்ளுவர் வாக்கு (குறள்-20), அந்த அளவிற்கு உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் மூலாதாரமாக இருப்பது நீர். இந்த நீர் இயற்கை நமக்களிக்கும் கொடை. அப்படிப்பட்ட உயிர் வாழ ஆதாரமான உயர் நீரை, வெறும் மழையாக மட்டுமல்லாமல், உலகத்து உயிர்களெல்லாம் சேமித்துப் பயன்படுத்தும் விதமாக, கடல், ஆறு என இயற்கையாக அமைந்த பல நீர் நிலைகளையும் தந்திருக்கிறது.

Letter Family

வருக்க வார்த்தைகள்

அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குள் நுழைந்த தந்தையைக் கண்டவுடன், வீட்டுப்பாடம் செய்துகொண்டிருந்த கலைவாணி, 'ஹய்யா... அப்பா வந்துட்டாங்க..." என்று வேகமாக ஓடி வந்து தன் தந்தையைக் கட்டியணைத்து முத்தமிட்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள்.

'என்னம்மா, இவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறாய்? என்ன காரணம்?" என்று கேட்டார் தந்தை.

Tamil words for word

சொல்லின் சொற்கள்

சொற்றமிழ் சொற்கள் - 1

சொல்லின் சொற்கள்
(சொல், இன் சொற்கள்)

சிவபெருமான், சுந்தரமூர்த்தி நாயனாரைப் பார்த்து, "சொற்றமிழ் பாடுக" என்றாராம். இறைவனைப் புகழ்ந்து பாட, தமிழ்ச்சொற்கள் சிறந்தது என சிவபெருமானே கூறியிருக்கிறார் என்றால், நிச்சயம் தமிழ்ச்சொற்கள் சிறப்பானவை தான் (அது பற்றிய கட்டுரையை இங்கே படிக்கலாம்). அப்படி என்ன சிறப்பு தமிழ்ச்சொற்களில்?

ஒரு சிறப்பை மட்டும் இன்று பார்ப்போம்.

Thiruvennainallor Temple
Featured

சொற்றமிழ் எனும் நற்றமிழ்

தமிழெமது தருமமுது - 4

செந்தமிழ், பைந்தமிழ், தீந்தமிழ், தேன் தமிழ், சங்கத்தமிழ், தங்கத்தமிழ், அருந்தமிழ், இசைத்தமிழ், அன்னைத்தமிழ், கன்னித்தமிழ், ஞானத்தமிழ், தெய்வத்தமிழ், முத்தமிழ், நற்றமிழ் என்று தமிழின் பல சிறப்பு பெயர்களைக் கேட்டிருக்கிறோம். ஒவ்வொரு சிறப்பு பெயரும் அப்படி அழைக்கப்படும் காரணத்தை பெயரிலேயே விளக்கிவிடுகின்றன, ஆனால் இது என்ன சொற்றமிழ்? தமிழில் மட்டும் தான் சொற்கள் உள்ளனவா என்ன? சொற்றமிழ் என்று அழைக்க என்ன காரணம்?

சீர்காழி சட்டைநாதர்
Featured

இறைவன் எழுதிக் காட்டும் மொழி எது தெரியுமா?

தமிழ் தான் சிவனுக்குப் பிடித்த மொழியாம்.  இதை நான் கூறவில்லை.  திருஞான சம்பந்தர், தமது தேவாரப் பாடலில் இவ்வாறு கூறுகிறார். தான் ஏன் தமிழில் பதிகங்கள் பாடினேன் என்பதை,  திருஞானசம்பந்தர்,  இந்தப் பாடலில் விளக்குகிறார். தான் பாடும் பாடல்கள் எதுவும் தமதில்லை என்றும், எல்லாம் இறைவனுடையது என்கிறார். இறைவன் எனக்குள்ளே அமர்ந்து எழுதுவதை தான், நான் இந்த உலகுக்கு வழிமொழிகிறேன் என்கிறார் சம்பந்தர்.

குற்றாலக் குறவஞ்சி

குற்றாலக் குறவஞ்சி

குற்றாலக் குறவஞ்சி  - இயற்றியவர் - திரிகூடராசப்பக் கவிராயர்.


திருக்குற்றாலக் குறவஞ்சி யென்னும் இந்நூல் திரிகூடராசப்பக் கவிராயரவர்களால், இன்றைக்கு ஏறக்குறைய முன்னூறு நானூறு ஆண்டுகட்குமுன் இயற்றப்பெற்ற அரிய நூலாகும்.  இது, திருக்குற்றால நகரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானாகிய திரிகூடநாதரைத் தலைவராகக் கொண்டு பாடப்பெற்றது; சொல்லழகு பொருளழகு மற்றும் கருத்தாழம் மிக்கது; ஓசையின்பமும் எளிய இனிய நடையும் வாய்ந்தது. அதிலிருந்து இரண்டு பாடல்களை மட்டும் இன்று பார்க்கலாம்.

இராமாயணம்

நாலுவரியில் இராமாயணம்

தமிழெமது தருமமுது - 3

இராமாயணம் என்பது மிகப் பெரிய ஒரு காவியம்.  அப்படிப்பட்ட காவியத்தின் கதை சுருக்கத்தை, கிட்டத்தட்ட முழுக் கதையையும் நாலு வரியில் சொல்வது சாத்தியமா? சாத்தியம் தான் என்று சொன்னது வேறு யாருமல்ல, நம் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான்.  அது மட்டுமல்ல, கதையின் முக்கிய கதாப்பாத்திரங்களைக் கூட இந்த நாலு வரியில் சொல்லிவிடுகிறார். வேறு யாராலும் இது போன்று செய்துவிட முடியாது,  கம்பரால் மட்டும் தான் முடியும், கம்பர் ஒருவரால் மட்டும் தான் அது முடியும்.

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net