(வாசிக்கும் நேரம் 10 - 15 நிமிடங்கள்)
தாத்தா என்பது அழகான ஒரு தமிழ்ச்சொல். அது பெயர்ச்சொல் மட்டுமல்ல, குடும்ப உறவுகளின் உயர்ச்சொல். எதை வேண்டுமானாலும் தா தா என்று உரிமையோடு கேட்கக்கூடிய ஒரு உன்னதமான உறவு. எதை கேட்டாலும் உவகையோடு கொடுக்கக்கூடிய உயர்வான உறவு. தோல் சுருங்கினாலும் தோளில் தூக்கி சுமக்கும், தோழமையாய் இருக்கும் தோதான உறவு. உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராது ஊக்கம் அளிக்கும் உற்சாக உறவு. பாசமழையில் நனைய வைக்கும் பரிசுத்தமான உறவு. தாயின் வழியோ தந்தை வழியோ, தாத்தா என்பது அன்பின் வழியே, என்றென்றும் அரவணைத்து நெறிகாட்டும் அவர்களின்அனுபவ மொழியே. "அன்பின் வழியது உயிர்நிலை" என்ற வள்ளுவர் வாக்குக்கு எடுத்துக்காட்டு தாத்தாமார்கள்.