Chidhambaram Natarajar Temple

பக்தி

பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன்

பட்டுக்கோட்டை நாடியம்மன் - பாதம்Goddess Sri Naadiamman
தொட்டு வணங்கினால் கோடி நன்மை - கதிர்
பட்டு விலகிடும் பனிப் போலே - நமை
விட்டு விலகிடும் பிணி யாவும்!

கருணை தெய்வம் நாடியம்பாளே
சரணம் என்று தேடி வந்தாலே
உலகை காக்கும் கோடி கரமே - உன்
இல்லம் காக்க ஓடி வருமே!

ஊரின் எல்லையில் வீற்றிருப்பாள்
நேரும் தொல்லைகள் போக்கிடுவாள்
மாறும் உலகில் என்றும் மாறாத - அன்பு
ஊறும் அழகைக் காண விழிப் போதாதே!

சித்திரை மாதம் ஊர் கூடும் - அழகிய
சித்திரம் போல தேர் ஓடும் - மக்கள்
சமுத்திரம் என ஊர் மாறும் - தேர்
பத்திரமாய் நிலைப் போய்ச் சேரும்!

பொழியும் மழை பேதம் பார்ப்பதில்லை - அன்னை
விழியும் பெய்கின்ற மழை போலே - அவள்
ஆலயம் நுழைந்தால் அது புரியும் - அங்கே
மேலோர் கீழோர் என்ற இருள் விலகும்!

மாலை மயங்கும் அந்தி நேரத்திலே - அம்மன்
ஆலய குளக் கரை யோரத்திலே
வீற்றிருந்தால் மனம் அமைதி பெறும்
ஊற்றுபோல் உள்ளத்தில் மகிழ்ச்சி வரும்!

தஞ்சைத் தரணியில் அமைந்திருக்கும் - எழில்
கொஞ்சும் பட்டுக்கோட்டை நகரினிலே
நஞ்சை அமிழ்தாய் மாற்றிடும் அம்மனை
நெஞ்சுருகி வணங்கி அருள் பெறுவோமே!

 

பக்தியுடன் என்றும்

இராம்ஸ் முத்துக்குமரன்.

 

 இந்தப் பாடலை PDF வடிவில் படிக்க, இங்கே சொடுக்கவும் (Click)

 

தொடர்புடைய கட்டுரைகள்

இராமர் ஆலயம் - அயோத்தியா !!!

இராமர் ஆலயம் - அயோத்தியா !!!

ஓம் நமசிவாய போற்றி!!!

Swamiye Ayyappa

சரணம் ஐயப்பா

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net