(ஜனவரி 22, 2024)
எங்கு நோக்கினும் இராம மயம்
"ஜெய் ஸ்ரீராம்" எனும் தாள நயம்
உணர்ந்து கொண்டோம் நமது சுயம் - இனி
இல்லை கோவில்கள் பற்றி பயம்!
(ஜனவரி 22, 2024)
எங்கு நோக்கினும் இராம மயம்
"ஜெய் ஸ்ரீராம்" எனும் தாள நயம்
உணர்ந்து கொண்டோம் நமது சுயம் - இனி
இல்லை கோவில்கள் பற்றி பயம்!
அது
உலக வரலாற்றில் ஒரு
கருப்பு தினம் - கடல்
அலைகள் வெளிப்படுத்திய - அரு
வருப்பு சினம்,
வெளிச்சம்போட்டு காட்டியது
இயற்கை தனது கோர முகம்,
இனியும் வேண்டாமே
இது போலவொன்று; கோடி யுகம்!
(சென்னை மழை - டிசம்பர் 2023)
சென்னை!
அது என்ன
வங்க கடலின் ஓர்
அங்கமா?
வந்த நீரெல்லாம் இங்கேயே
தங்குமா?
ஆறுகள் ஏரிகள்
ஆக்ரமிக்கப்பட்டு
கொள்ளையடிக்கப்படுவதால்,
ஊருக்குள் தப்பியோடியது
நீர்!
பழுதடைந்தது
அரசு இயந்திரம்!
மரணமில்லாப் பெருவாழ்வு
இறைவா எனக்கு வேண்டாம்
மரணம் வரும் வரை இவ்வாழ்வில் - மன
நிறைவாய் வாழ்ந்தால் அது போதும்!
முதுமை வந்த பின்னாலே
முழுதும் முடங்கிப் போகாமல்
முடிந்த வரையில் தன்னாலே
நடமாடி இருந்தால் அது போதும்!
(வாசிக்கும் நேரம் 10 - 15 நிமிடங்கள்)
தாத்தா என்பது அழகான ஒரு தமிழ்ச்சொல். அது பெயர்ச்சொல் மட்டுமல்ல, குடும்ப உறவுகளின் உயர்ச்சொல். எதை வேண்டுமானாலும் தா தா என்று உரிமையோடு கேட்கக்கூடிய ஒரு உன்னதமான உறவு. எதை கேட்டாலும் உவகையோடு கொடுக்கக்கூடிய உயர்வான உறவு. தோல் சுருங்கினாலும் தோளில் தூக்கி சுமக்கும், தோழமையாய் இருக்கும் தோதான உறவு. உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராது ஊக்கம் அளிக்கும் உற்சாக உறவு. பாசமழையில் நனைய வைக்கும் பரிசுத்தமான உறவு. தாயின் வழியோ தந்தை வழியோ, தாத்தா என்பது அன்பின் வழியே, என்றென்றும் அரவணைத்து நெறிகாட்டும் அவர்களின்அனுபவ மொழியே. "அன்பின் வழியது உயிர்நிலை" என்ற வள்ளுவர் வாக்குக்கு எடுத்துக்காட்டு தாத்தாமார்கள்.
எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன். தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.
இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net